சனாதன தர்மம்

 சனாதன தர்மா என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?

சனாதன தர்மம் என்றால் 'நிலையான ஏற்பாடு' என்று பொருள்.


சமஸ்கிருதத்தில் சனாதனம் என்றால் நிலையானது..

தர்மம் என்றால் ஏற்பாடு. 

நிலையான ஏற்பாடு. 


அதென்ன 'நிலையான ஏற்பாடு'?

பிராமணரை தலைமயாகக் கொண்டு, இந்த சமூகத்தை ஆளும் அதிகாரத்தை, பிராமணர்களே தனது கையில் தொடர்ந்து வைத்திருக்கும் நிலையான ஏற்பாடு.


சனாதன தர்மத்திற்கு விளக்கம் தரும் சனாதனிகள் பொதுவான ஆன்மீக கருத்துக்களாகவே சனாதனத்தைப் பற்றி சொல்லி மழுப்பிவிடுவார்கள்.

சரி. 

சமூகத்தில், சனாதன தர்மம் என்றால் என்ன ? அது எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது? 

எவ்வாறு மக்கள் வாழவேண்டும் என்று சனாதனம் விரும்புகிறது ?


ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி வாழ்விடங்கள்(ஊர்கள் அல்லது தெருக்கள்)..  

சாதிக்குச் சாதித் தனித்தனித் தொழில்கள்..

தனித்தனி சுடுகாடுகள்..

தனித்தனி திருமண முறைகள்..

தனித்தனி சாவுச் சடங்குகள்..

தனித்தனி கல்வி முறைகள்..

உள்ளிட்ட தனித்தனி கலாச்சார நடைமுறைகளை வரையறுப்பது, அவற்றை பரம்பரை பரம்பரையாக தக்க வைப்பது சனாதனம்.

ஒரு சாதி பெறும் கல்வியைக் கூட மற்றவர் சமமாகப் பெறமுடியாது. பெறக்கூடாது என்கிறது சனாதனம்.


பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திர என்று முதலில் பிரிக்கப்பட்ட நான்கு வருணங்கள் தான், பிற்காலத்தில் பல உட்பிரிவுகள் கொண்ட சாதியாக விரிவாக வளர்ந்தன.


வருண அடிப்படையில், சாதி அடிப்படையில் காலங்காலமாய் செய்து வந்த குலத் தொழிலை ஒருவர் மீறக் கூடாது என்பதை வலியுறுத்துவதும், அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதும் தான் சனாதனம்.


சனாதனம் காப்பாற்றி வரும் முக்கியமான விஷயம், எந்த ஒரு சாதியும் இன்னொரு சாதிக்கு சமமில்லை. 

ஏதோ ஒரு சாதிக்கு மேலே அல்லது கீழே தான் இருக்கும். இருக்க முடியும்.

அனைத்து சாதிக்கும் மேலே உயரத்தில், உயர்வாய் இருப்பது, கருதப்படுவது, மதிக்கப்படுவது பிராமண சாதி மட்டுமே. 

பிராமண சாதி, கடவுளுக்கும் மேலே என்கிறது சனாதனம்.


நான்கு வர்ணங்களைத் தாண்டியுள்ள சமூகப் பிரிவினரிடமிருந்து அதாவது அந்த வர்ணங்களுக்கு உட்படாத பூர்வீகக் குடிமக்களிடமிருந்து(பஞ்சமர்கள் - தலித்துகள் - இவர்கள் தான் ஐந்தாவது வர்ணம்), நிலம் கல்வி மற்றும் அதிகாரம் போன்றவற்றைப் பறித்து அல்லது மறுத்து அவர்களைத் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்குவது தான் சனாதனம்.


குழந்தை திருமணத்தை நியாயப்படுத்துவதும், விதவை மறுமணத்தைத் தடுப்பதும், கணவன் இறந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற்றிப் படுகொலை செய்வதும், போன்ற நடவடிக்கைகள் தான் சனாதனம். 

மாதவிடாய்காலத்திலும் கர்ப்ப காலத்திலும் பெண்களை ஒதுக்கி வைத்து ஆணாதிக்கப் போக்குகளை நிலைப்படுத்துவதும் பெண்களைத் தாழ்மைப் படுத்துவதும் தான் சனாதனம் 


இந்த அனைத்தையும் சேர்த்த பார்ப்பனீய கோட்பாடுகளை, வலியுறுத்துவது தான் சனாதனம்.

இவற்றை இன்றும் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் கொண்டு வந்து சமூகத்தில் திணித்து நிலைநிறுத்த முற்பட்டு வருகிறது பார்ப்பனீயம்.


சனாதனம் இந்து மதமல்ல. அது இந்துத்துவாவின் கோட்பாடு. 

சனாதன தர்மா பார்ப்பனீயத்தின் அதிகாரக் கொள்கை கோட்பாடு.









👆
இப்படியும்  ஒரு வரலாற்று உண்மையை இப்பொழுது நாம் தெளிவாக அறிந்துகொண்டோம் என்று நாம் நினைக்கும்பொழுது இன்னொருபக்கம் பார்பனீயர்கள் கூறும் பொதுவான விளக்கம் 
👇


சனாதனம் அப்படினா ஏதோ பெரிய பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தை எல்லாம் இல்லீங்க..


நாம , நம்ம அம்மா அப்பா தினமும் நம்ம பூஜை அறையில் சாமி கும்பிடுறோம் பாருங்க அது சனாதனம்.


ஊர்ல திருவிழா நடக்கும் போது காப்பு கட்டி ஒன்னுகூடி சாமி கும்பிடுறோம்ல அதுவும் சனாதனம்தான்.


 அமாவாசை ஆடி பௌர்ணமிக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவு கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நாம சாப்பிடுறோம்ல அது சனாதனம்.


 பழனிக்கு மாலை போட்டு போவதும் சனாதனம் தான். ஐயப்பனுக்கு விரதம் இருந்து நடந்து செல்வதும் சனாதனம்தான்.


சனாதனம் என்பது இந்த மண் சார்ந்தது. இந்த மண்ணுக்கு சொந்தமானது. நம் முன்னோர் , பெரிய பெரிய ஞானிகள் பின்பற்றியது.


கிருஸ்தவர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது.‌‌ இஸ்லாமியர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது அதே போல் தான் ஹிந்துக்களுக்கும்.


ஆனால் இங்கு இருக்கும் திராவிட கும்பலுக்கு ஹிந்து என்றால் மட்டும் எரியக்கூடாத இடமெல்லாம் எரியும் போல.


இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஒருவர் ஹிந்துக்களுக்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அறிய நிகழ்வு இங்குதான் நடக்கும். 


கேட்டால் "ஆரியன் பார்ப்பான்னு" உருட்டுவானுங்க . ஏன்டா இந்த கலியுகத்துல எத்தனை நாளைக்குதான் நமத்து போன இதே வரியை சொல்லி உருட்டுவீங்க. பிரசாந்த் கிஷோர் என்னும் பார்ப்பானோ , துர்கா அம்மா கோவில் கோவிலா ஏறவில்லை எனில் இந்த ஆட்சி ஏது.?_


பாஜக பிடிக்கவில்லையா , பாஜகவை எதிர்த்து  நேரடியா அரசியல் சண்ட செய்‌ அதுதான் துணிச்சல்.


அதைவிட்டுவிட்டு எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் , சனாதனாம், ஹிந்து கடவுள் இல்லைனு...... மலிவு அரசியல் எத்தனை நாளைக்கு இதை வச்சே உருட்ட முடியும்‌


கிருஸ்தவத்தில் பணம் சம்மாதிப்பற்காக மட்டும் ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது அதை எதிர்த்து மாநாடு போட வேண்டாம்   திராவிடத்தால் எதிர்த்து அறிக்கை விட முடியுமா....??  முடியவே முடியாது காரணம் சிறுபான்மையினர் ஓட்டு போயிரும்


அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்னு " படத்தில் ஒரு காட்சி வரும் அதே மாதிரி ஹிந்துக்கள் முழிக்கும் போது திராவிடம் புதையும் சூழ்நிலை உருவாகும்‌.


சுய நலத்திற்காக கட்சிகளில் இருக்கும் ஹிந்துக்கள்..


கொஞ்சமாவது சொந்த வாழ்வியல் தர்மத்திற்கு  கட்சிகளை கடந்து விசுவாசமாக இருங்கள்..


விழித்துக் கொள்ளுங்கள்..,ஹிந்து சகோதர, சகோதரிகளே.

over-consumption

 உலகில் இன்றைய பெரும் பிரச்சனை over-consumption தான் என்கிறார்கள். 


இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. 


சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 


இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 

வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?


 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 

ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


 'பூஜா kit' விலை 180 ரூபாய்! 


உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!


தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்! 


ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் யுக்தி!


 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித 'fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். 


சமீபத்திய உதாரணம் vegetable wash! 


250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 


எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.


இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது.


64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு! எல்லா சோப்புகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது நமக்கு தெரிவதில்லை.


home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு, 

ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டு விடு, அவ்வளவு தான், எல்லாம் விற்று  விடும்! 


தினமும் 3 GB டேட்டா இலவசம். 

வேறு என்ன செய்ய? 

வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 

இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். 

எதையும் புதிதாகக் கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 


'Stop making stupid people famous' என்று சொல்வார்கள். 


அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 


மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers! 


வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 


data என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே over consumption தான்.


 Buffet- ல் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 


விளைவு: வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 


இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!


மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.


 'நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு' என்பதெல்லாம் சரி தான்.


 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?


 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.


 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான். 


'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.


 'expression பத்தலை' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்.


பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?


 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?


நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 


நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 


அளவுக்கு மிஞ்சினால்.?



🫢


இதை  இங்கு நான் பேசியதால் மட்டும் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து விடாதா !



🙄🙄🙄🤔🤔🤔🤔

Madurai Meenakshi Amman Temple 360 decree view

 *_மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள். இதனை ஓபன் செய்து படத்தை இடது அல்லது வலது  பக்கமாக செல்போன் திரையில் விரலை நகர்த்துங்கள்...!! மிகவும் அருமையாக இருக்கு..! தொழில்நுட்ப புரட்சியில் மிக அருமையான காட்சி அமைப்பு._*


*https://view360.in/virtualtour/madurai/*

பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட்



சிவாயநம


*நாசா_வியந்தது*


*ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.* 


வாழ்க்கை ஒரு வட்டம், 

உலகமும் வட்டம், 

கோள்கள் சுற்றுவதும் வட்டம் 

இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது 

*மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..* 


ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. 


கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. 


எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. 

அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.


*_சிவாயநம_*


நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. 

ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 


*1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர்* என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!


ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்..

*_சிவாயநம_*

ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. 

கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!

*_சிவாயநம_*

சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.. 

*_சிவாயநம_*

அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்.. 

அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்.. 


ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் *965* கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்..

*_சிவாயநம_*

காரணம் 965 என்பது விண்வெளியில் 

தவிர்க்க இயலாத எண்!! 

*ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!*


வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.. 

அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..

*_சிவாயநம_*

புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது

*ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.!* 

அப்பாறையில் இருந்த

_வரி வடிவங்கள் அச்சு அசலாக *இராக்கெட்டுகளின் சர்க்யூட்* *பேனல்களின்* வடிவத்தில் இருந்தது!!!_

மேலும்

 *பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்!* 

அது எப்படி என்று இன்றுவரை

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!

*_சிவாயநம_*

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.. 


*சித்தர் சந்நிதி,*

*தட்சிணாமூர்த்தி சந்நிதி,*

*முக்குறுணி விநாயகர் சன்னிதி,* 

இவையெல்லாம்

 _விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!_ 

*_சிவாயநம_*

நாயன்மார்கள் பிரகாரம்,

108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் 

ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்..

*_சிவாயநம_*

இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில்

*உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே..* 

அநேகமாக

 *பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம்* 

அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம்.

*_சிவாயநம_*

உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.! 


இதைப் படித்ததும் தமிழரின் பெருமையை உலகறியச் செய்ய 

இதை அதிகம் பகிருங்கள்.

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

 

இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார்.


 ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ஶ்ரீராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.


எனவே... 


ஶ்ரீராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. 


மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.


22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.


1. மகாலெட்சுமிதீர்த்தம்


இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.


இதில் ஸ்ஞானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.


2. சாவித்திரி தீர்த்தம்,


3. காயத்ரி தீர்த்தம்,


4. சரஸ்வதி தீர்த்தம்.


இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. 


இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.


5. சேது மாதவ தீர்த்தம்,


இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். 


இதில் ஶ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.


6. நள தீர்த்தம்,


மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது.


இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.


7. நீல தீர்த்தம்,


மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. 


இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.


8. கவாய தீர்த்தம்,


இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. 


இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.


9. கவாட்ச தீர்த்தம்,


இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது. 


இதில் நீராடுவதால் நரகத்திற்கு 

செல்ல மாட்டார்கள்.

மன வலிமை, தேக ஆரோக்கியம், 

திட சரீரம் கிடைக்கும்.


10. கந்நமாதன தீர்த்தம்,


சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. 


இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.


11. சங்கு தீர்த்தம்,


ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில்

பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.


12. சக்கர தீர்த்தம்.


ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. 


இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.


13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்,


இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது.


இதில் நீராடுவதால்

பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், 

பில்லி சுனியமும் நீங்கும்.


14. சூர்ய தீர்த்தம்,


இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.


இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.


15. சந்திர தீர்த்தம்,


இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.


இதில் நீராடுவதால் 

ரோக நிவர்த்தி அகலும்.


16. கங்கா தீர்த்தம்,


 17. யமுனா தீர்த்தம்,


 18. காயத்ரிதீர்த்தம்,


இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது.


இவைகளில் நீராடுவதனால் பிணி, 

மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.


19. சாத்யாம்ருத தீர்த்தம்,


திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. 


இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.


20. சிவ தீர்த்தம்,


இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. 


இதில் ஸ்ஞானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.


21. சர்வ தீர்த்தம்,


இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சன்னதி 

முன் உள்ளது. 


இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.


கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். 

இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.


22. கோடி தீர்த்தம்.


இந்த தீர்த்தமானது ஶ்ரீ இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது.


அதனால் ஶ்ரீராமனாவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. 


அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது.


இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 

இதற்கு கட்டணம் உண்டு.  


பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.


கோடி தீர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது 

என்பது சம்பிரதாயம்.

நடக்க வேண்டும்

 *நடைப் பயிற்சியின்* முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......


Bioclock என்றால் என்ன?


நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. 


நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்

60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 


50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். 


அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.

70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். 


ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. 


எனவே நண்பர்களே, 


1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 


2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 


3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 


4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 


5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 


6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 


எண்ணங்களே வாழ்க்கை.


முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!


 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 

Keep your Legs Active and Strong !!!


 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.


நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் *நடந்து செல்லுங்கள்*.


உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 

*நடந்து செல்லுங்கள்*.


டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!

 எனவே, *நடந்து செல்லுங்கள்*.


கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.


 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 

கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 

*தினமும் நடைபயிற்சி.*

 

சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 

*நடந்து செல்லுங்கள்* 


மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.


 10,000 அடிகள் / நாள்

  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 

இரும்பு முக்கோணத்தை உருவாக்கி

  மனித உடலைச் சுமக்கிறது. 


ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?

 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 

*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.


 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.


 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 


ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.

*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*


 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.

 *நடங்கள்.*


வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 


பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்* 


▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 


*10,000 அடிகள் நடக்க*

 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 


*365 நாட்கள் நடைபயிற்சி* 

உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 


*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால்...

 *உடைந்த காலம்*


நட்பு உடைந்து முகநூலானது...

சுற்றம் உடைந்து 

வாட்சப் ஆனது...

வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது...

உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...


குளக்கரை உடைந்து குளியலறை ஆனது...

நெற்களம் உடைந்து கட்டடமானது...

காலநிலை உடைந்து வெப்பமயமானது...

வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...


துணிப்பை உடைந்து நெகிழியானது...

அங்காடி உடைந்து அமேசான் ஆனது...

விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...

ஒத்தையடி உடைந்து எட்டுவழியானது...


கடிதம் உடைந்து இமெயிலானது...

விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...

பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...

புத்தகம் உடைந்து 

இ-புக் ஆனது...


சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..

இட்லி உடைந்து 

பர்கர் ஆனது...

தோசை உடைந்து பிட்சாவானது...

குடிநீர் உடைந்து 

குப்பியில் ஆனது...


பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது...

வெற்றிலை உடைந்து பீடாவானது...

தொலைபேசி உடைந்து கைபேசியானது...

வங்கி உடைந்து 

பே டி எம் ஆனது...


நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...

புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...

மார்க்கம் உடைந்து மதவெறியானது...

அரசியல் உடைந்து அருவெறுப்பானது...


பொதுநலம் உடைந்து சுயநலமானது...

பொறுமை உடைந்து அவசரமானது...

ஊடல் உடைந்து விவாகரத்தானது...

காதல் உடைந்து 

காமமாய்ப் போனது...


நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால்...

உடைவது உலகினில் நிரந்தரமானது...

தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்...

அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே...