உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....



நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, 
~~~PASSPORT 
~~~DRIVING LICENCE, 
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.



உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் நான் 

( L.S.MANIKANDAN.,M.Sc., D.C.H.T., D.G.T., ) கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன் இதனை SHARE செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

சௌராட்டிர மொழி:

சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

1997 ஆம் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 510,000 சௌராட்டிரர்கள் வாழ்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இம் மொழி பேசுவோர் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.

சமசுகிருதம் பேசுவது போன்ற ஒலி வடிவினை சௌரஷ்ட்ரீ மொழி பெற்று உள்ளது.

தற்போது இம் மொழி பேசுவோர் தமது இரண்டாம் மொழியாகத் தமிழையே கொண்டுள்ளனர். எல்லாவித நடைமுறைத் தேவைகளுக்கும் தமிழைப் பேசவும் எழுதவும் இவர்கள் வல்லவர்களாக உள்ளனர்.

புகழ் பெற்ற சில சௌராட்டிரர்கள்:

டி. எம். சௌந்தரராஜன், பாடகர்
எம். வி. வெங்கட்ராம், எழுத்தாளர்
முன்னாள் அமைச்சர் எசு.ஆர்.இராதா,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.எசு. ராம்பாபு,
முன்னாள் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி,
திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.

சாப்பிடும்போது பேசக்கூடாது

'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.......

ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!

முஸ்லிம்களின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடமை பெற்றுள்ளது.

ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானின் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் ஈகைத் திருநாள், ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது

ரமலான் வந்துவிட்டால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் என்பதும், இல்லாதோருக்கு இருப்போர் உதவி செய்தல் என்பதும் அதிகரித்துவிடும்.

ரமலான் நோன்பு இருப்பவர்கள் முதல் பிறை கண்ட பின்னர் தான் தங்களது நோன்பை (விரதமிருத்தலை) தொடங்குகின்றனர்.

நோன்பு இருக்கும் 30 நாட்களும் சூரியன் உதிப்பதற்கு முன்பாக எழுந்து உணவு உண்ண வேண்டும். இந்த நேரத்தை சஹர் உடைய நேரம் என்று அழைக்கின்றனர்.

சூரியன் உதிக்கும் முன்பாக உணவு எடுத்த பின்னர், சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட பருகக் கூடாது. சூரியன் மறைந்த பின்னரே நோன்பு திறக்க வேண்டும்.

நோன்பு திறத்தலை இப்தார் என்று அழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். தாமதம் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள், நோயாளிகளை தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 7 வயது குழந்தைகளுக்கும் நோன்பு பிடிப்பதற்கு அனுமதி உண்டு. சிறுவர் - சிறுமிகள் நோன்பின்போது சோர்வடைந்தால், அந்த நேரத்தில் அவர்கள் நோன்பை திறந்து கொள்ளலாம். இதற்கு அவர்களது பெற்றோர்களின் கவனம் அதிகம் தேவை.

மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் பெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சுபுஹீ எனப்படும் அதிகாலை தொழுகைக்கு முன்பு நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள், மஹ்ரிப் எனப்படும் மாலை நேர தொழுகைக்கு முன்பாக நோன்பு திறப்பது வழக்கம். சூரியன் அஸ்தமனம் மற்றும் உதய நேரங்களை கணக்கில் கொண்டு இந்த 2 நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படுகின்றது.

நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். புறம் பேசுதல், பொய் சொல்லுதல், பிறருக்கு துன்பம் விளைவித்தல், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.

நோன்பு இருக்கும் நேரத்தில் தவறான வார்த்தைகளையோ, தவறான செயல்களையோ பயன்படுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.


நோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது.நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

மாத்திரைகள்:

இந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.

இன்சுலின்கள்:

அபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

நோன்பு கஞ்சி வகைகள்:

ஓட்ஸ் பார்லி நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

1. ஓட்ஸ் - 50 கிராம்
2. அரைத்த பார்லி பவுடர்-இரண்டு டேபிள் ஸ்பூன்
3. ஆயில் - இரண்டு டேபிள் ஸ்பூன்
4. பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1
5. தக்காளி (நறுக்கியது) - 1
6. பச்சை மிளகாய் (கீறியது) - 2
6. வெந்தயம் - 1 டீஸ்பூன்
7. பட்டை - 1
8. பூண்டு - 2
9. நறுக்கிய புதினா - இரண்டு டேபிள் ஸ்பூன்
10. பால்- 1 டம்ளர்
11. உப்பு தேவைக்கேற்ப
12. சூப் செய்வதற்கேற்ற பாத்திரம்

செய்முறை

1. பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாக வதக்கவும்.
2. வதக்கியதும் சுமார் 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்பொழுது கீழ்கண்ட பொருட்களுடன் கொதிக்கவிடவும். ஓட்ஸ், தக்காளி மற்றும் அரைத்த பார்லி பவுடரை பச்சை தண்ணீரில் கட்டியில்லாமல் கலந்தது.
3. மிதமான சூட்டில் வைக்கவும்.
4. ஓட்ஸ் நன்றாக வெந்ததும் பால், உப்பு மற்றும் நறுக்கிய புதினா சேர்க்கவும்.
5. சுமார் 25 நிமிடம் மிதமான தீயில் கொதித்தால் சூப் பதத்திற்கு வரும்.
6. இப்பொழுது சுவையான, மருத்துவ குணம் நிறைந்த ஓட்ஸ் பார்லி நோன்பு கஞ்சி ரெடி.

மருத்துவ குறிப்பு

சர்க்கரை, இதய கோளாறு மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.

நன்றி: அபூஹூதைஃபா



சிம்பிள் நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள் ;

பச்சரிசி – 100 -150 கிராம்
வெந்தயம் – அரைடீஸ்பூன்
சீரகம் –அரைஸ்டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4-6 பல்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
ரம்பை இலை- சிறிது
மல்லி ,புதினா,கருவேப்பிலை – சிறிது
தேங்காய்ப்பால் –பாதி காயில்.
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

முதலில் அரிசியை தண்ணீரில் கழைந்து எடுத்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.சீரகம் வெந்தயம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பூண்டு பொடியாக அரிந்து கொள்ளவும்.

பின்பு குக்கரில் 750 மில்லி தண்ணீர் வைத்து அரிசியை போட்டு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் முழுதாய்,மல்லி புதினா இலை,ரம்பை இலை,சீரகவெந்தயப்பொடி சேர்த்து கொதி வரவும் குக்கரை மூடி சிம்மில் 10-15 நிமிடம் வைத்து இறக்கவும்.


கஞ்சி வெந்ததும் மசித்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் வதக்கி ,அரைஸ்பூன் இஞ்சி பூண்டு ,கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் தேங்காய்ப்பால் சேர்த்து நுரை கூடி வரும்.

பின்பு தாளித்த தேங்காய்ப்பாலை ரெடி செய்த கஞ்சியில் சேர்த்து விடவும்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.இந்த கஞ்சி சத்தானதும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும்.

சுவையான கமகமக்கும் சிம்பிள் நோன்பு கஞ்சி ரெடி.
இதற்கு புதினா அல்லது மல்லித்துவையல் அருமையாக இருக்கும்.

முருங்கைக்கீரை கஞ்சி :

மேலே குறிப்பிட்டபடி கஞ்சியை ரெடி செய்து கொள்ளவும்.
ஒரு குத்து முருங்கைக்கீரை, ,சிறிது நறுக்கிய வெங்காயம்,4 பல் பூண்டு ,கால்ஸ்பூன் சீரகம் ,1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ரெடி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் வெடித்து,வெங்காயம்,பூண்டு ,முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

ஏற்கனவே தயார் செய்த கஞ்சியை ஒரு பவுல் எடுத்து அதில் ரெடி செய்த கீரையை சேர்த்து கலந்து பரிமாறவும்.இந்த கஞ்சியை நிறைமாத கற்பிணிக்கு கூட கொடுக்கலாம்.மிகவும் சத்தானதும் ருசியானதும் ஆகும்.தனியாக கீரை கஞ்சி செய்ய அரிசி பாதி வெந்து வரும் பொழுது கீரை சேர்த்து மேற் சொன்னபடியும் கஞ்சி தயாரிக்கலாம்.அல்லது கஞ்சி ரெடியானபின்பு ரெடி கீரையை கலந்து பின்பும் பரிமாறலாம்.

சுவையான முருங்கைக்கீரை கஞ்சி ரெடி

பிஷ் கஞ்சி

மேலே குறிப்பிட்ட படி கஞ்சியை ரெடி செய்து கொள்ளவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு துண்டு முள் இல்லாத மீனை,உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து பின் பொரிக்கவும்.பொரித்த மீனை உதிர்த்து கொள்ளவும்.

மீன் பொரித்த அந்த கடாயில் நறுக்கிய வெங்காயம்,இரண்டு பல் பூண்டு ,மல்லி இலை வதக்கி பொரித்து உதிர்த்த மீனை போட்டு நன்கு வதக்கவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

ஒரு பவுலில் ரெடி செய்த கஞ்சியை எடுக்கவும்.பொரித்து உதிர்த்து தயார் செய்த மீனை போட்டு கலந்து பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள பிஷ் கஞ்சி ரெடி.

நன்றி: -ஆசியா உமர்

பிரியாணி நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம்
அரிசி நொய் = 3 டம்ளர்
பச்ச பருப்பு = அரை டம்ளர்
வெங்காயம் = நான்கு
தக்காளி = முன்று
பச்ச மிளகாய் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = முன்று மேசை கரண்டி
கேரட் = இரண்டு
கொத்து மல்லி = அரை கைபிடி
புதினா கால் கைபிடி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
எண்ணை முன்று மேசை க‌ர‌ண்டி
டால்டா = ஒரு தேக்க‌ர‌ன்டி
ப‌ட்டை = ஒரு அங்குல‌ம் அள‌வு
கிராம்பு = முன்று
ஏல‌ம் = ஒன்று
தேங்காய பால் = அரை மூடி


செய்முறை

1. அரிசி நொய் (நொய் மிக்சியில் பொடிக்க முடியவில்லை என்றால் அரிசியை ஊறவைத்து கையால் பினைந்து உடைத்து விடவும்) மற்றும் பாசி பருப்பு (வருத்தது) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய வயகன்ற சட்டியில் ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீரை கொதிக்க விட்டு ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு குழைய வேக விடவும்.

3. கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும், வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். புதினா, கொத்து மல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும்.தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

4. இப்போது கீமாவை தனியாக தாளிக்கனும்.சட்டியை காயவைத்து எண்ணை + டால்டாவை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கி, வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு வாடை போனதும் கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்ச மிளகாயை போட்டு வதக்கி சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.

5. கேரட்டை பொடியாக அரிந்து சேர்த்து, கீமா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.பாதி வேகும் போடு தயிரை சேர்க்கவும்.கூட்டு ந‌ல்ல‌ வெந்து கிரிப்பாகி எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்கி விட‌வும்.

6. வெந்து கொண்டிருக்கும் அரிசியில் இந்த‌ க‌ல‌வையை சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து அடி பிடிக்காம‌ல் ந‌ன்கு கிள‌றி கொதிக்க‌ விட்டு க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி புதினா தூவி இர‌க்க‌வும்.

குறிப்பு:

இதே போல் சிக்க‌ன் கீமாவிலும் செய்ய‌லாம் இல்லை சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌னை பொடியாக‌ அரிந்து போட்டும் செய்ய‌லாம் அரிந்து போட்டு செய்யும் போது 400 கிராம் அள‌வு எடுத்து கொள்ள‌வும். க‌றி அதிக‌மா விரும்பாத‌வ‌ர்க‌ள் இதே அள‌வே போதும்.

வெஜிடேரியன்கள்வெஜ் க‌ஞ்சியும் இதே முறையில் க‌றி, சிக்க‌னுக்கு ப‌தில் (முட்டை கோஸ், கேர‌ட், பீன்ஸ், முழுபாசிப‌ருப்பு சிறிது சேர்த்து செய்ய‌லாம்)
ப‌ச்ச‌ ப‌ருப்புக்கு ப‌தில் க‌ட‌லை ப‌ருப்பும் போட‌லாம்.

இதே போல் லைட் ம‌சாலாவில் ப‌ச்ச‌மிளகாய் ம‌ட்டும் சேர்த்து ப‌ள்ளி வாச‌ல் க‌ஞ்சி போல் த‌யாரிக்க‌லாம்.


நோன்பு கஞ்சி மற்றொரு வகை

தேவையானவை:

அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை – கால் கப்
கொத்து கறி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும். எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும். பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண் பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது.


ஈசி ஓட்ஸ் நோன்பு கஞ்சி

தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)
பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை:
----------------
தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும் பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும் பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும் எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும் புதினா,மல்லி தூவி இறக்கவும். சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.

அவசரமாக நோன்பு கஞ்சி செய்ய வேண்டும் என்றால் இப்படி ஓட்ஸ் வைத்து செய்யலாம் அரிசி வைத்து செய்தால் சீக்கிரம் வேகாது ஓட்ஸ் சீக்கிரம் வெந்து விடும் உடம்புக்கு நல்லதும் கூட ஓட்ஸ்.


ஆட்டுக்கறி நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி = 500 கிராம்
பூண்டு = 1 முழுபூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 2
கேரட் = பாதி
தக்காளி = 2
சமையல் எண்ணை= 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சம் பழம் = 1
தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம்

சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:

1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாகஎடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு,மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும். நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவுதண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம்பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.


முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய்சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.


அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

வைரஸ் தாக்கிய பெண் டிரைவிளிருந்து பைல்களை காக்க சிறந்த வலி ...


வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.... 

Google+ Comments Box பயன்படுத்தலாமா?

Google+ Comments Box பயன்படுத்தலாமா? நல்ல கேள்வி! Google+ Comments Box அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஒரு சிலர் மாறி  விட்டனர். பலர் மாற ஜோசிக்கின்றனர். இக்கேள்விக்கு பதில் வேண்டாம் என்பதே ஆகும். Google+ Comments Box பயன்படுத்த தொடங்கியது முதல் இது வரை பல பிரச்சனைகள் கூகுளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இதில் வெளிப்படையாக சில தீமைகள் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியில் பல சிக்கல்கள் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் preview பார்க்கும் போது தோன்றாத பிரச்சனை உங்கள் வாசகருக்கு தோன்றி இருக்கலாம். அவை தொடர்பாக சில...

Google+ Comments Box அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலர் இதை பற்றி எழுதி இருந்தார்கள். எனக்கும் மின்னச்சலில் வரவேற்பு வந்து இருந்தது. ஆனால் எழுதவில்லை....

இதில் இனம் காணப்பட்ட சில பிரச்சனைகள் -

  • G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)
  • Comment இல் Embed setting மட்டுமே உள்ளது. வேறு வகைகள் இல்லை. (popup)
  • பலருக்கு பழைய comments தோன்றவில்லை.
  • அனைத்து comment களும் blog owner ஆல் கட்டு படுத்த முடியாது. ஒருவர் அவதூறாக எழுதினாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
  • blogger dashboard இல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.
  • Dashboard இல் இருந்து moderate செய்ய முடியவில்லை. ஒவ்வொரு பதிவாக சென்று தால் பார்க்க வேண்டி // கட்டுபடுத்த வேண்டி  உள்ளது.
  • Google தேடல் முடிவில் கருத்துரைகள் இடம் பெறுவது குறித்து அதாவது SEO குறித்து எதுவும் சொல்லவில்லை.
  • cookie filters களுக்கு இதுவும் ஆதரவு அளிப்பதால் commets சாதாரண பார்வையாளருக்கு தோன்றுவதில் கூட இடர்பாடு ஏற்படுகிறது.
இப்பிரச்சனைகள் கால ஓட்டத்தில் நீக்கப்படும். என்னை போல காற்று வாங்கும் comment box வைத்து இருப்பவர்களுக்கு புதிய மாற்றத்தால் ஒருவரும் பாதிக்கபட்ட போவதில்லை. (அதனால் தான் நான் Disqus உடன் உள்ளேன்)
ஒரு பதிவில் 100 கருத்த்துரைகளை அள்ளும் பதிபவர்களின் வாசகர்கள் நிச்சயம் சிரமப்படுவார்கள். எனவே புதிய மாற்றங்களை உடனடியாக பரிசோதித்து பார்க்காதீர்கள்.

Google எப்பாடு பட்டாவது G+ இனை facebook அளவுக்கு வளர்க்க படாத பாடு படுகிறது. அதன் ஒரு காய் நகர்த்தல் தான் இது.

யாரவது அவசரப்பட்டு Google+ Comments Box மாறி இருந்தால் உங்கள் blogger இல் Google + tab இல் என்று  Use Google+ Comments on this blog உள்ள சரியை எடுத்து விடுங்கள். மீள பழைய நிலைக்கு செல்ல முடியும்.


என்னை பொருத்தவரை எப்போது Disqus தான் சிறந்தது.

இத்தகவல்கள் அனைத்தும் Google Group மற்றும் Blogger Hashtag மூலம் திரட்டப்பட்டது.

பத்திரப்பதிவுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்: நிலமோசடியை தடுக்க நடவடிக்கை

சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டுமென்றால் இன்று பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மீண்டும் விற்பனை செய்வது, ஆள்மாறாட்டம் மூலம் போலியான புகைப்படங்களை ஒட்டி மோசடி செய்வது... என நில விற்பனையின் போது ஏராளமான மோசடிச் சம்பவங்களும் அரங்கேறுவதை காணமுடிகிறது.  

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் நில மோசடி, நில அபகரிப்பு வழக்குகள் போடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மாவட்டங்கள்தோறும் நில மோசடியை விசாரிப்பதற்கென்றே தனி போலீஸ் படையும் உருவாக்கப்பட்டது. நில விற்பனையின் போது பவர் என்ற வார்த்தை இன்று அதிகம் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். 

தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் விற்பனை செய்ய நினைக்கிறார். ஆனால் அலைந்து திரிந்து ஆட்களை பிடித்து நிலம் விற்பனை செய்ய அவரது உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்திலோ... அல்லது அவர் வெளிநாட்டில் இருந்தாலோ அவருக்கு பதிலாக குறிப்பிட்ட நிலத்தை வேறு ஒருவர் விற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் பவர் என்று அழைக்கப்படும் பொது அதிகாரம். 

இதன்படி பவர் பெறுபவர் அந்த நிலத்துக்கு முழு அதிகாரம் படைத்தவராக மாறுகிறார். அதே நேரத்தில் இந்த பவரை எப்போதும் வேண்டுமானாலும் நிலத்துக்கு சொந்தக்காரர் ரத்து செய்வதற்கும் சட்டத்தில் இடமுள்ளது. இவை எல்லாமே பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இப்படி பவர் வாங்குபவரிடம் நில உரிமையாளர் குறிப்பிட்ட விலையை சொல்லி இவ்வளவு ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தால்போதும் என்று கூறியிருப்பார். இதுவே பவர் வாங்குபவருக்கு இதுநாள் வரை சாதகமாக இருந்தது. 

ஆனால் இதனை பயன்படுத்தி பவர் வாங்கியவர், தன் இஷ்டத்துக்கு ஒரு விலை வைத்து குறிப்பிட்ட நிலத்தை விற்பனை செய்து லாபம் பார்த்து விடுவார். பவர் வாங்குபவர், கொடுப்பவர் 2 பேருமே உயிருடன் இருக்கும் வரைதான் பவருக்கும் உயிர். இதில் ஒருவர் உயிரிழந்து விட்டாலும் பவரும் செத்துப் போய்விடும் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் பவர் கொடுத்தவர் இறந்த பின்னரும் பறிபோன அதிகாரத்தை பயன்படுத்தி மோசடியாக நில விற்பனை நடைபெற்று வருகிறது. 

இப்படி நிலம் வாங்கி ஏமாறுபவர்கள் அப்பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி நடைபெறும் நில மோசடியை தடுப்பதற்காக பத்திர பதிவின்போது அதிரடியாக புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

பவர் வாங்கி நிலத்தை விற்பனை செய்யும் நேரங்களில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நிலத்தின் உரிமையாளர் வரத்தேவையில்லை என்ற நிலை இருந்தது. பவர் வாங்கிய நபரே, இன்னாருக்கு இந்த இடத்தை விற்பனை செய்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டால் போதும். வேலை முடிந்து விடும். 

ஆனால் புதிய கட்டுப்பாட்டின்படி நிலத்தின் உரிமையாளர் வரவேண்டும். இல்லையென்றால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வரமுடியவில்லை என்ற அரசு டாக்டரின் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பவர் வாங்கி நிலம் விற்பனை செய்பவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இதனை வரவேற்கும் நேரத்தில் நடைமுறை சிக்கல்களும் இருப்பதாக கூறுகிறார்கள். 

இதுபற்றி அகில இந்திய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நல சங்க தலைவர் வசந்த குமார், மாநில பொதுச்செயலாளர் அன்புமணி ஆகியோர் கூறியதாவது, 

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியதுதான். அதே நேரத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அறிவித்திருப்பது நடைமுறையில் சில சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

நீங்கள் தான் கூடுதல் விலைக்கு நிலத்தை விற்கப் போகிறீர்களே, எனது மருத்துவ சான்றிதழ் இருந்தால்தான் அதனை விற்பனை செய்ய முடியும். எனவே பேசிய தொகையைவிட கூடுதலாக கொஞ்சம் கொடுங்கள் என்று நில உரிமையாளர் பவர் வாங்கியவரிடம் கேட்பதற்கும் வாய்ப்பு உள்ளது. 

அதே நேரத்தில் கமிஷன் கொடுத்துதான் டாக்டர் சான்றிதழும் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பலர் வாங்கி இருப்பவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

புதிய நடைமுறைகள் வரும்போது எதிர்ப்புகள் கிளம்புவது சகஜம்தான் போகப்போக அது சரியாகி விடும் என்று கூறுகிறார். பத்திர பதிவுத்துறை அதிகாரி ஒருவர். எது எப்படியோ.. நில மோடிகள் தடுக்கப்பட்டால் சரிதான்!

ரமணகிரி சுவாமிகள் - மறைக்கப்பட்ட வரலாறு










திருவண்ணாமலை நமக்கு பல மகான்களை தந்திருந்தாலும்அதில் முதன்மையானவர் என்று ரமண மகரிஷியை சொல்லலாம்ரமணரை தமிழகத்தில் பலருக்கு அறிமுகபடுத்தியது இசைஅமைப்பாளர் இளையராஜா.இளையராஜாவிற்கு  ரமணர்தான்  ஆன்மீக  குரு.ரமணருக்காக இளையராஜாஇயற்றிய "ராஜாவின் ரமணமாலை",பக்தி பாடல்களில் மிகவும் ஹிட் அடித்தஆல்பம். "பிட்சை பாத்திரம்  ஏந்தி வந்தேன்" பாடல்கூட ரமணமாலைஆல்பத்தில்  இருந்து நான் கடவுள் படத்தில் பயன்படுத்தப்பட்டது என்று பலரும்அறிந்திருப்பீர்கள்.. 

ரமண மகரிஷி தனது பக்தர்களுக்கு "silent teacher" என்று உணரபடுகிறார்.எல்லோரும் இப்போது பயன்படுத்தும் "நான் யார்" என்ற தத்துவவிசாரணைக்கு சொந்தக்காரர்.ரமண மகரிஷிக்கு  இந்தியா மட்டுமில்லாமல்  வெளிநாடுகளில் இருந்தும் பல பேர்  சீடர்களாகஇருந்தனர்.அதில் குறிப்பிடும்படி சொல்லவேண்டும் என்றால் டேவிட்கோதமன்(David Godman), இவர்தான் ரமணரை வெளி உலகத்துக்கு தனதுபுத்தககங்கள்வலைத்தளம் மூலம் அறிமுகபடுத்தினார்அதேபோலஇந்தியாவில் ரமணரின்  முக்கிய சீடர் என்று உத்தர் பிரதேசத்தை  சேர்ந்தபாப்பாஜியை சொல்லலாம்.



பீர் வேர்டின்

இதே போல் பலருக்கு ரமணர் ஆன்மீக குருவாக இருந்தாலும் நார்வே நாட்டைசேர்ந்த பீர் வேர்டின்(per wertin) ரமணரின் மிக மிக முக்கியமானசீடர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார்ஆனால் இவரை பற்றி எந்த குறிப்பும்ரமணர் பற்றிய வரலாற்றில் இல்லை.இவரை ஏன் இருட்டடிப்பு செய்தார்கள்அல்லது தற்செயலாக இவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறதாஎன்று தெரியவில்லை.

நார்வேயிலிருந்து தத்துவவியல் படிப்பு படிக்க இந்தியா வந்த மாணவர்தான் பீர்வேர்டின் .பனாரஸ் பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பில் வேர்டின்சேர்ந்தாலும்அவருக்கு ஆன்மீக தேடலில் அதிகம் விருப்பம்இருந்திருக்கிறது.“ராஜா யோகா”,”பதஞ்சலி யோகா “போன்ற யோக  முறைகளைஅவர் கற்றிருக்கிறார்இந்தியாவில் அவரின் ஆன்மீக தேடலுக்கு நல்லவழிகாட்டியாக இருந்தவர் சுன்யட்டா.சுன்யட்டா டென்மார்க்கைசேர்ந்தவர்,ஆன்மீக தேடலில் வேர்டினை போல் அதிகம் நாட்டமுள்ளவர்சுன்யட்டா.இவர்தான் பின்னர் ரமண மகரிஷியை வேர்டினுக்குஅறிமுகப்படுத்தினார்ரமண மகரிஷி அந்த காலகட்டத்தில்தான் ஒரு மௌனஆன்மீக புரட்சியை தென் தமிழகத்தில் செய்து கொண்டிருந்தார்.

அதீத ஆன்மீக ஈடுபாட்டால் பனாரஸ்சில் இருக்கும் ஒரு சாதுவிடம்  ஆன்மீக தீட்சை வாங்கி கொள்கிறார் வேர்டின் .பிறகு அவரது  தேடல் முழுதும்ஆன்மீகத்தை நோக்கி மட்டுமே இருந்திருக்கிறதுபடிப்பில் அதிகம் விருப்பம்இல்லாதவராய் ஆன்மீக தேடலை மட்டும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றவேர்டின்,அதற்க்கு தனக்கு தீட்சை அளித்த சாது பல வழிகளில் உதவிசெய்துள்ளார்..(வேர்டினுக்கு தீட்சை அளித்த சாதுவின் பெயர் தெரியவில்லை )





                 பீர் வேர்டின் நார்வேயில் இருக்கும்போது


வேர்டின் பின்பு 1949ம் ஆண்டு சுன்யட்டா அறிமுகம் செய்த ரமணரை சந்திக்கதிருவண்ணாமலைக்கு வருகிறார்.ரமணரை பார்த்ததும்  இவர்தான்  நான்இவ்வளவு நாள் தேடிய குரு என்று எண்ணி ரமணரின் முழு  நேர சீடராக மாறுகிறார் வேர்டின்திருவண்ணமலையில் இருக்க துவங்கிய வேர்டின்தனது ஆன்மீக ஆராய்ச்சியை தொடர்கிறார்.அங்கு இருக்கும் பல குகைகள்வேர்டின் தியானம் செய்யும் இடமாக மாறின.பின்னர்  ரமணரின் முன்பு 48நாள்  "ஆத்ம  விசாரா"(self enquiry) என்ற  தியான முறைப்படி தியானம் செய்து"நான் யார்"  என்ற தத்துவ விசாரணையை மேற்கொள்கிறார்ஒரு சிவராத்திரிநாளன்று தன்னுள் இருந்து  இயங்கும்  அந்த பிரபஞ்ச இயக்கம் வெடித்து "நான்யார்" என்று தன்னை முழுதும் அறிந்து கொள்கிறார் வேர்டின்.

அன்று அவர் உணர்ந்த அந்த அனுபவத்தை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

"I don’t know anything,
and that ‘I’ which knows is nothing but an ignorant fool.

I think, when I don’t think,

that I have no end and no beginning.

That which thinks has to take thousands of births.

When there is ‘I’ He is not; when He is, I am not."


வேர்டின்    à    ரமணகிரி.

வேர்டினுக்கு ரமணர் "ரமணகிரி" என்று பெயர் மாற்றம் செய்கிறார்.ரமணகிரிஎவ்வளவு நாள் ரமணருடன் இருந்தார் என்று தெரியவில்லை,ஆனால் ரமணர்இறக்கும்போது ரமணகிரி ரமணருடன் இருந்திருக்கிறார்.அந்த சமயத்தில்இமயமலையில் இருந்த ரமணகிரியை  ரமணர் ஒரு வித எண்ண அழைப்பால் அழைக்க (psychic message) ,ரமணாஸ்ரமம்  வந்திருக்கிறார் ரமணகிரி.ரமணகிரி வந்து சில நாட்களில் ரமணர் சமாதி அடைந்திருக்கிறார்.ரமணகிரிதிரும்ப இமயமலைக்கு செல்ல நினைத்து சென்னையில் சில நாள் தங்கிருக்கும் அச்சமயத்தில்ரமண மகரிஷி  ரமணகிரியின்  கனவில் தோன்றி  "இமயமலைக்கு செல்ல வேண்டாம்இங்கயே உன் ஆன்மீக சேவையை தொடரசொல்லிருக்கிறார்தன்  குருவின் விருப்பபடி தனது ஆன்மீக சேவையை தொடரஅவர் தேர்ந்தெடுத்த இடம் சென்னை ,திருவான்மியூர்.




சென்னை   à   மதுரை


திருவான்மியூர் கடற்கடையில் ஒரு சிறு குடிசை அமைத்து தியானித்து(பலதியான முறைகளை பயன்படுத்தி)வந்த ரமணகிரியின் மேல்  அங்குள்ள பல மீனவர்கள்   தங்கள்  அன்பை  வெளிபடுத்தியுள்ளனர்பல மீனவர்கள் அவரின் பக்தர்  ஆகிருக்கிறார்கள்.ஆனால் யாருக்கும் தான்  ஒரு குருவாக  இருக்க அவர்  என்றுமே எண்ணியதில்லை,மாறாகஅவர்களே பல தத்துவ தியான முறைகளை மேற்கொண்டு தன்னை  அறிய வேண்டும் என்று எண்ணினார்சில நாள் கழித்து மற்றுமொரு கனவுரமணகிரியை  இந்த முறை மதுரைக்கு போக சொல்கிறார்ரமண மகரிஷி.பின்னர் ரமணகிரி மதுரைக்கு அருகில் இருக்கும் சிறுமுலைபகுதியில் தனது அடுத்து வரும் காலங்களை கழித்தார்.அங்கு தங்கிருந்த சமயம்இவரை பற்றி பலர் தெரிந்துகொண்டு ரமணகிரியை பார்க்க வருவார்கள்பலர்பக்தர் ஆனார்கள்.ரமணர்தான் தன்னை இயக்குவதாக எண்ணிய ரமணகிரிசிறுமுலையிலேயே  தங்கினார்.




                     சமாதியில் இருக்கும் ரமணகிரி படம் 



சமாதி..

தனது 34ம் வயதில் டுய்பர்கிளோசிஸ்(Tuberclosis) நோய் ரமணகிரியைதாக்கியது.பின்னர் உடல்நலம் மேலும் மோசமடையவே அவரால் எழுந்து நடக்கமுடியவில்லைஅப்பொழுது தன் பக்தர்களிடம்  இந்த கஷ்டம் என்உடலுக்குத்தான்எனக்கில்லை என்று சொல்லுவாராம்அந்த சமயங்களில்பக்தர்கள் கொண்டு வரும் பழங்களை காணிக்கையாக பெற்று வந்தார்.ஒருநாள்பக்தர் தந்த மாம்பழத்தை  சாப்பிட்டுவிட்டு  நாளை இது குப்பையாகபோகபோகிறது என்று சிரித்துக்கொண்டே சொல்லிருக்கிறார்அதே இரவுஉடல்நலம் மேலும் மோசமைடைய அன்றிரவே தனது 34ம் வயதில் 1955ம்ஆண்டு  புற உலகிலிருந்து விடை பெற்றுருக்கிறார் ரமணகிரிஅவர்கடைசியாக  இறக்குமுன்  உச்சரித்த வார்த்தை “Let us go”.



                    சமாதியில் வைக்கப்பட்டுள்ள  லிங்கம் 



ரமணகிரி சிறுமுலையில் தங்கியபோது அவ்விடம்  ரமண பாதம் என்றபெயரால் அழைக்கப்பட்டது.அங்கேயே அவரின் சமாதி இப்பொழுது உள்ளது.(வாடிப்பட்டி அருகே). சிவலிங்கம் ஒன்றும் சமாதி மேல்வைக்கப்பட்டுள்ளதுஇரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சிவராத்திரியன்று2000க்கும்  அதிகமான அவரின் பக்தர்கள்  கூடிஏழைகளுக்கு அன்னதானம்செய்து அவரை வழிபடுகிறார்கள்.


Cold fire..

ரமண மகரிஷியை தனது ஆன்மீக குருவாக ஏற்று தன் வாழ்நாள் இறுதி வரைதமிழகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ரமணகிரி."ஆத்மா விசாரா" என்ற"நான் யார்" தேடுதலுக்கு பின் தன்னை ஒரு முட்டாள்  என்றே தன்னை பார்க்கவருபவர்களிடம் சொல்லிருக்கிறார் ரமணகிரிசிறுமுலை பகுதியில்தங்கியிருக்கும் போது தனது பக்தரான ராமசந்திரன்தனது எண்ணங்களைஒரு தொகுப்பாக வெளியிட கேட்டபோது அதற்கு  சம்மதித்து இருக்கிறார்ரமணகிரி..அதற்கு அவர் வைத்த  பெயர் "Cold Fire".

“Cold fire”தொகுப்பிலிருந்து சில...
  • His Name, taken once with wholehearted love and a one-pointed mind, is worth more than the knowledge collected from every book all over the world.
  • Learning is learned ignorance. Unlearning is learning.
  • What you speak about others doesn’t reveal anything about them, but about you.
  • The power of listening attracts more than the power of speaking.
  • Jnana and bhakti are not separate from each other. One cannot know Him without loving Him, and one cannot love Him without knowing Him.
  • Non-attachment does not mean indifference; love does not mean attachment; attachment is that which takes; love is that which gives.
  • Shut the doors and the door will be opened.
  • Religion is experience. It should be practised, not studied or discussed, and at the very least not preached. Those who preach don’t know; those who know don’t preach.
  • About your worldly troubles: you must do as you think best yourself, but it is good policy to keep away from other’s plates, however sweet and inviting they look. Both sugar and arsenic are white.
  • The behaviour of a fool and a wise man is the same. The only difference is that a fool goes from life to lives while a wise man goes from lives to Life. One leaves the ocean behind; the other returns.
  • Lord Ramana, Lord Subramania, Lord Siva, my Father and the Self are one and the same. Mother is His tool, Arunagiri their child, and Ramanagiri this fool.



எனக்கு ரமணரை அறிமுகப்படுத்தியதுஎன் நண்பன் இளையராஜா.திருவண்ணாமலைக்கு  அடிக்கடி செல்லும் என்நண்பன் கூற கேட்டு,ரமணரை பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.மேலும்ரமணரை பற்றி  தெரிந்துக்கொள்ள முயற்சி எடுத்து அவரின் வரலாற்றைபடிக்கும்போதுஎதோ ஓர்  இடத்தில்  ரமணகிரியை பற்றி சிறு குறிப்புஇருந்தது."Devotees of Ramana" போன்ற தொகுப்பில்க்கூட ரமணகிரியின்செய்திகள் இல்லைரமணகிரியின்  வரலாறு பெரிதும்கண்டுகொள்ளப்படவில்லை என்பதில் வருத்தம்தான்.இந்த பதிவு ரமணகிரியின் வரலாற்றை தமிழ் வாசகர்களுக்கு தொகுத்தளிக்கும்  சிறு முயற்சியே..இந்த பதிவுமூலம் சில நூறு  நண்பர்களுக்கு  ரமணகிரியின் வரலாறு சென்றடைந்தால்மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.