எது குறித்தும் அஞ்சாதீர்கள்...
எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு...


அறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பட்ட ஓர் அழகான பின்னல் ஆடையே நம் வாழ்க்கை
அறிவு நம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. உணர்ச்சி இலக்கணத்தின் வழியே பொங்கும் இலக்கியமாகச் சுழன்று வெளிப்படுகிறது 
அறிவு நம் வாழ்க்கை எனும் சக்கரத்திற்க்கு அச்சாணியாகத் தாங்கிய வண்ணம் அசையாமல் நிற்கிறது. உணர்ச்சி சக்கரமாகச் சுழண்று நம் இன்ப துன்பப் பயணத்தை நடத்தித் தருகிறது.
இந்த வாழ்க்கைப்பயணத்தில் ஏதாவது தடை நேர்கிறது என்றால் அதற்க்கு உங்கள் அறிவு உணர்ச்சி எனும் இரண்டு பாகங்களில் ஏதோ ஒன்றில் தொழில் நுட்பச் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது என்றே பொருள்.
எந்த மாற்றங்களுக்கும் தயார் என்ற ஊக்கத்துடன் மனத்தை வெட்ட வெளியாக திறந்து வைத்திருப்போருக்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாகக் கிடைக்கும்.
 மற்றவர்கள்தான் எனக்காக மாற வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத் தான் எல்லாமே சிரமமாகத் தென்படும்.
மாற மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்த பிடிவாத மனத்திற்க்கு பெயர் தான் விதி... விணைப்பயன்... துரதிர்ஷ்டம்... என்பன போண்ற பல பெயர்கள் வைத்துள்ளோம்.
சமையலில் உப்பு சற்று அதிகமாகத் தெரிந்தால் தண்ணீரை சேர்த்து சரி செய்யலாம். தண்ணீர் அதிகமாகி சப்பென்று இருந்தால் சிறிது உப்பு சேர்த்து சரி செய்யலாம்.
அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும் அறிவு சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.
எல்லாமே தொழில்நுட்பக் கோளாறுதான்

எனவே எதர்க்கும் அஞ்சாதீர்கள். எல்லாவற்றிற்க்கும் தீர்வு உண்டு.



வாழ்க வளமுடன்